பீதியைக் கிளப்பிய மழை
நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம் இது.பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தோம். பழையவீடு கூரை மற்றும் ஓடுகளைக் கொண்டு மண் சுவரால் கட்டப்பட்டது. பழைய வீட்டில் இருந்த மின்இணைப்பை துண்டிக்கச் சொல்லி மின்வாரியத்தைக் கோரியிருந்தோம். மின் இணைப்பைத்துண்டிப்பதில் சிறிது தாமதம் ஏற்படவே அனைத்து சுவர்களும் இடிக்கப்பட்டுவிட்ட நிலையில்> சுவரில்மின் இணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்த இடம் மட்டும் இடிக்கப்படாமல் விட்டுவைக்கப்பட்டிருந்தது. காலி மனையில் இரண்டு அடி அகல மண் சுவர் மட்டும் மின் இணைப்போடு நின்று கொண்டிருந்தது. அன்று இரவு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் வெளுத்துக் கட்டிய மழை எங்களை மிகுந்த பீதியில் ஆழ்த்தியது. இடிக்காமல் விட்டு வைத்திருந்த மண் சுவர் மழையில் கரைந்து கீழே விழுந்து விட்டால் மின் வயர்கள் அறுந்து தெருவில் பெருக்கெடுத்தோடும் வெள்ள நீரில் மின்சாரம் பாய்ந்து ஏதேனும் விபரீதம் ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சினோம். மின்வாரியத்திற்கு போன் செய்து புகார் செய்யவும் இயலவில்லை. மழை சிறிதுநேரத்தில் விட்டுவிடும் என்று நம்பிக்கொண்டிருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து பெய்த மழையால் எங்களது இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையத் தொடங்கியபோதுதான் இயல்பு நிலைக்கே திரும்பினோம். நல்ல வேளையாக எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. காலையில் சென்று பார்த்தபோது அந்த மண் சுவர் ஈரத்தில் உருகி நின்றது. இன்னும் பத்து நிமிடம் மழை தொடர்ந்திருந்தால் கூட நாங்கள் அஞ்சிய அந்தஅசம்பாவிதம் நடந்திருக்கும் போலும். நல்ல வேளையாக ஏதும் நடக்கவில்லை.
நன்றி: புதியதலைமுறை 22-11-2012


0 comments:
Post a Comment